Advertisement

3-வது நாளான இன்று பங்குசந்தை சரிவுடன் வர்த்தகம்

By: vaithegi Wed, 18 Oct 2023 10:33:45 AM

3-வது நாளான இன்று பங்குசந்தை சரிவுடன் வர்த்தகம்

மும்பை : 66,398 புள்ளிகளாக வர்த்தகம் .. இந்திய பங்குச்சந்தை குறியீடுகள் ஆன சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி, கடந்த வாரங்களில் செறிவுடன் வர்த்தகமாகி வந்தது. ஆனால், இந்த வாரத்தில் திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய 2 தினங்களாக ஏற்றத்துடன் வர்த்தகமானது. இதையடுத்து தற்போது 3-வது நாளான இன்று சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது.

எனவே அதன்படி, இன்றைய வர்த்தக நாளில் 66,473.74 புள்ளிகள் என ஏற்றத்துடன் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ சென்செக்ஸ், 29.66 புள்ளிகள் சரிந்து 66,398.44 புள்ளிகளாக வர்த்தகமாகி கொண்டு வருகிறது. ஆனால், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ நிஃப்டி 18.55 புள்ளிகள் உயர்ந்து 19,830.05 புள்ளிகளாக வர்த்தகத்தை நிறைவு செய்து உள்ளது.

trading,stock market ,வர்த்தகம்,பங்குசந்தை

முந்தைய வர்த்தக நாளில் 66,558 புள்ளிகள் என ஏற்றத்துடன் தொடங்கிய சென்செக்ஸ் வர்த்தக நாளின் முடிவில் 261.16 புள்ளிகள் அதிகரித்து 66,428.09 புள்ளிகளாக வர்த்தகத்தை நிறைவு செய்தது. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 79.75 புள்ளிகள் அதிகரித்து 19,811.50 புள்ளிகளாக வர்த்தகத்தை நிறைவு செய்தது.

இவ்வாறு பங்குச்சந்தைகள் வீழ்ச்சியடைவதற்கு அமெரிக்காவில் கடன் வட்டி வீதங்கள், பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஏற்றம் மற்றும் பங்குச்சந்தையில் லாபத்தைப் பதிவு செய்து முதலீட்டாளர்கள் பணத்தைப் பெறுவது போன்றவை காரணங்களாக கூறப்படுகிறது. தற்போது, பிரெண்ட் கச்சா எண்ணெய் 1.92 டாலர் விலை அதிகரித்து 91.82 டாலராக விற்பனையாகி வருகிறது.

மேலும், சர்வதேச கச்சா எண்ணெயின் விலை 203.00 அல்லது 2.82 சதவீதம் அதிகரித்து ரூ.7,395 ஆக விற்பனையாகி வருகிறது. பங்குச்சந்தையில் ஏற்பட்ட இந்த மாறுதலால், சென்செக்ஸில் மஹிந்திரா & மஹிந்திரா, அல்ட்ராடெக் சிமெண்ட், மாருதி சுசுகி இந்தியா, லார்சன் & டூப்ரோ லிமிடெட் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றமடைந்துள்ளன.இண்டஸ்இண்ட் வங்கி, எச்சிஎல் டெக்னாலஜிஸ், ஐடிசி லிமிடெட், பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவடைந்து உள்ளன.

Tags :