- வீடு›
- வணிகம் or வர்த்தகம்›
- இன்று தங்கத்தின் விலை சற்று அதிகரித்துள்ளது
இன்று தங்கத்தின் விலை சற்று அதிகரித்துள்ளது
By: vaithegi Mon, 26 Sept 2022 12:28:27 PM
சென்னை: தற்போது டாலரின் மதிப்பு உயர்ந்துள்ளதால் தங்கம் விலையும்
அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய உக்ரைன்
மற்றும் ரஷ்யா இடையேயான போரின் விளைவால் கச்சா எண்ணெய், தங்கம் விலை மிக
கடுமையாக உயர்ந்து வருகிறது. மேலும் பங்குச்சந்தையும் சரிந்து கொண்டு
வருகிறது.
இதுவும் தங்கத்தின் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக
கருதப்படுகிறது. இந்நிலையில் மத்திய அரசு தங்கத்திற்கான இறக்குமதி விதியை
அதிகரித்தது. இந்த இறக்குமதி விதி அதிகரித்த ஒரு வாரத்தில் மட்டும்
ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 1000 ரூபாய் வரை உயர்ந்து. இந்த
தங்கத்தின் விலை பங்கு சந்தை நிலவரத்தை பொறுத்து தீர்மானிக்கபடுவதால்
அவ்வப்போது விலையானது ஏற்ற இறக்கம் கண்டு வருகிறது.
சென்னையில் இன்று (செப்டம்பர் 26) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,651 ஆக சற்று உயர்ந்துள்ளது. நேற்று இதன் விலை 4,650 ரூபாயாக இருந்தது. அதேபோல, சவரனுக்கு ரூ.8 அதிகரித்து ரூ.37,208ஆக விற்கப்படுகிறது.
அதேபோன்று இன்று வெள்ளியின் விலை குறைந்துள்ளது. அதன்படி வெள்ளி கிராமுக்கு கிராம் ஒன்றுக்கு 80 பைசா குறைந்து ரூ.60.70ஆகவும், கிலோவுக்கு ரூ.800 குறைந்து, ரூ.60,700 ஆகவும் விற்கப்படுகிறது.