- வீடு›
- வணிகம் or வர்த்தகம்›
- இன்று ஆபரணத் தங்கத்தின் விலை உயர்வு
இன்று ஆபரணத் தங்கத்தின் விலை உயர்வு
By: vaithegi Thu, 13 Oct 2022 2:48:09 PM
சென்னை: தற்போது டாலரின் மதிப்பு உயர்ந்துள்ளதால் தங்கம் விலையும்
அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய உக்ரைன்
மற்றும் ரஷ்யா இடையேயான போரின் விளைவால் கச்சா எண்ணெய், தங்கம் விலை மிக
கடுமையாக உயர்ந்து வருகிறது. மேலும் பங்குச்சந்தையும் சரிந்து கொண்டு
வருகிறது.
இதுவும் தங்கத்தின் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக
கருதப்படுகிறது. இந்நிலையில் மத்திய அரசு தங்கத்திற்கான இறக்குமதி விதியை
அதிகரித்தது. இந்த இறக்குமதி விதி அதிகரித்த ஒரு வாரத்தில் மட்டும்
ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 1000 ரூபாய் வரை உயர்ந்து.
நேற்று வரை தங்கம் விலை சற்று குறைந்து இருந்தது. அதனால் நகைப்பிரியர்கள் சற்று நிம்மதியில் தங்கம் வாங்க கடைகளை நோக்கி படையெடுக்க தொடங்கினார்கள். இந்நிலையில் இன்றைய நிலவரப்படி தங்கம் விலை சற்று அதிகரித்துள்ளது.அதன் படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.37,920க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிராம் தங்கம் ரூ. 10 உயர்ந்து, ரூ.4,740க்கு விற்பனை செய்யப்படுகிறது. அது மட்டுமில்லாமல் சென்னையில் ஒரு கிராம் வெள்ளி ரூ. 50 காசுகள் குறைந்து ரூ.62.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ. 41,368 விற்பனை செய்யப்படுகிறது.