- வீடு›
- வணிகம் or வர்த்தகம்›
- இன்று ஆபரண தங்கத்தின் விலை திடீரென குறைவு
இன்று ஆபரண தங்கத்தின் விலை திடீரென குறைவு
By: vaithegi Wed, 19 Oct 2022 12:09:57 PM
சென்னை: தற்போது டாலரின் மதிப்பு உயர்ந்துள்ளதால் தங்கம் விலையும்
அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய உக்ரைன்
மற்றும் ரஷ்யா இடையேயான போரின் விளைவால் கச்சா எண்ணெய், தங்கம் விலை மிக
கடுமையாக உயர்ந்து வருகிறது. மேலும் பங்குச்சந்தையும் சரிந்து கொண்டு
வருகிறது.
இதுவும் தங்கத்தின் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக
கருதப்படுகிறது. இந்நிலையில் மத்திய அரசு தங்கத்திற்கான இறக்குமதி விதியை
அதிகரித்தது. இந்த இறக்குமதி விதி அதிகரித்த ஒரு வாரத்தில் மட்டும்
ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 1000 ரூபாய் வரை உயர்ந்து.
சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,700-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.40 குறைந்து, ஒரு சவரன் ரூ.37,600-க்கு விற்பனையாகிறது. மேலும் வெள்ளியின் விலை, 30 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.61.50-க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.61,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.