- வீடு›
- வணிகம் or வர்த்தகம்›
- இன்றைய ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரம்
இன்றைய ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரம்
By: vaithegi Thu, 08 Sept 2022 1:22:14 PM
சென்னை: தற்போது டாலரின் மதிப்பு உயர்ந்துள்ளதால் தங்கம் விலையும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போரின் விளைவால் கச்சா எண்ணெய், தங்கம் விலை மிக கடுமையாக உயர்ந்து வருகிறது. மேலும் பங்குச்சந்தையும் சரிந்து கொண்டு வருகிறது.
இதுவும் தங்கத்தின் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. இந்நிலையில் மத்திய அரசு தங்கத்திற்கான இறக்குமதி விதியை அதிகரித்தது. இந்த இறக்குமதி விதி அதிகரித்த ஒரு வாரத்தில் மட்டும் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 1000 ரூபாய் வரை உயர்ந்து. இந்த தங்கத்தின் விலை பங்கு சந்தை நிலவரத்தை பொறுத்து தீர்மானிக்கபடுவதால் அவ்வப்போது விலையானது ஏற்ற இறக்கம் கண்டு வருகிறது. அந்த வகையில் இன்றைய காலை நிலவரப்படி தங்கம் விலை உயர்ந்துள்ளது
நேற்று தமிழகத்தில் சவரன் ரூ.440 குறைந்து ரூ.37,560-க்கு விற்பனையானது. ஆனால் இன்றைய காலை நேர நிலவரப்படி
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 401 உயர்ந்து
ரூ.37,840-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே போல் ஒரு கிராம் தங்கம்
ரூ. 5 உயர்ந்து ரூ.4,730க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் தங்கத்தை
தொடர்ந்து சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.70 காசுகள்
அதிகரித்து ரூ.59.50-க்கும் 1 கிலோ வெள்ளி ரூ.59,500-க்கும் விற்பனையாகி
வருகிறது. நேற்றை ஒப்பிடும் போது இன்று தங்கம் விலை அதிகரித்துள்ளது சற்று
அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.