Advertisement

எக்ஸ் ரே மூலம் கொரோனா பாதிப்பை கண்டறியும் தொழில்நுட்பம்

By: Karunakaran Mon, 30 Nov 2020 1:25:58 PM

எக்ஸ் ரே மூலம் கொரோனா பாதிப்பை கண்டறியும் தொழில்நுட்பம்

உலகம் முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் பரவி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த கொரோனா சோதனைகள் வேகமாக்கப்பட்டு வருகின்றன. கொரோனா சோதனைகளை வேகமாக்க பல்வேறு சாதனங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியோடு நுரையீரல் எக்ஸ் ரே புகைப்படங்களை கொண்டு ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்கிறதா என்பதை அறிந்து கொள்ள முடியும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டீப்கொவிட் எக்ஸ்ஆர் (DeepCOVID-XR) என அழைக்கப்படும் புதிய தொழில்நுட்பம் மெஷின் லெர்னிங் அல்காரிதம் மூலம் இயங்குகிறது.

x-ray,corona infection,corona detection,technology ,எக்ஸ்ரே, கொரோனா தொற்று, கொரோனா கண்டறிதல், தொழில்நுட்பம்

இந்த தொழில்நுட்பம் கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்கிறதா என்பதை பத்து மடங்கு வேகமாகவும், அதிக துல்லியமாகவும் கண்டறிகிறது. இதுபற்றிய ஆய்வு கட்டுரை ரேடியாலஜி இதழில் வெளியாகி இருக்கிறது. இது கொரோனா தவிர வேறு காரணங்களுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளிடம் மருத்துவர்கள் பயன்படுத்தலாம்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளிடம் பயன்படுத்தலாம் என இந்த தொழில்நுட்பத்தை உருவாக்கி இருக்கும் ஆய்வு குழு நம்பிக்கை தெரிவித்து உள்ளது. இந்த தொழில்நுட்பம் பாதிப்பு இருக்கிறதா என்பதை எளிதில் கண்டறிவதால், தொற்று உறுதி செய்யப்பட்டவர்களை விரைவில் தனிமைப்படுத்தி, அடுத்தக்கட்ட சிகிச்சையளிக்க முடியும்.

Tags :
|